20 March, 2011

ஹோலி கொண்டாடும் காரணம் தெரியுமா

அனைவருக்கும் ஹோலி திருநாள் நல்வாழ்த்துக்கள் மக்களே!!!
ஹோலி கொண்டாடும் காரணம் தெரியுமா!!!!2 காரணங்கள் பரவலா சொல்லப்படுது.
1)நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்ய காஸ்யப ராஜாவை வதம் பண்ணினதை கொண்டாடுவதுதான் ஹோலின்னு சில மக்கள் சொல்றாங்க
2)பரமசிவன் பண்ணின தவத்தின் உக்கிரம் தாங்க முடியாம அதை கலைக்க எல்லரும் மன்மதனை அனுப்பினார்கள்.
அவரும் அம்பா விட்டாரு.சிவன் படக்குனு கண்ண திறந்தார்.அந்த பார்வை பட்டு  மிஷ்டர்.மதன் சாம்பலோபதி ஆகிட்டாரு.
மிசஸ்.மதன் அதாங்க நம்ம ரதி ரொம்ப கவலையாகி சிவங்கிட்ட முறையிட்டதும் அவர்  சிஸ்டம்  ரீஸ்டோர் பண்ணிகுடுத்தார்(விர்ச்சுவலா தான்) புரியாதவர்கள் விக்கிபீடியா பார்க்கவும்.நீங்க ஹோலி கொண்டாடி இருக்கிங்களா!!!
ஹோலி எதுக்காக கொண்டாடுறாங்கன்னே எனக்கு தெரியாம நாலு வருஷம் எங்க காலேஜில நாங்க கொண்டாடுனோம்.
நாங்க என்றால் தமிழ் நாட்டு மாணவிகள்!!!
ஏன் இத பத்தி எழுதனும்னு ஆசப்பட்றேன்னா கொஞ்ச நேரம் முன்னாடி மார்க்கெட் போயிட்டு வந்தேன்.நம்ம அண்ணாமலை பல்கலைகழகத்தின் வட இந்திய மாணவக்கண்மணிகள் நடு ரோட்டில் சந்தோஷமாக ஹோலி விளையாடிக்கொண்டிருந்தனர்..அவங்க மேல இருக்கர கலர் போதாதுன்னு ரோட்டில் போகும் மக்களுக்கும்  கொஞ்சம் கலர் தூவினார்கள்...சோ எனக்கும் மலரும் நினைவுகள்!!
ஓக்கே..நாம கதைக்கு போகலாம்.கேர்ள்ஸ் ஹாஸ்டலில் ஹோலி எப்டி கொண்டாடுவாங்கன்னு தெரியுமா!!!
4 வருஷமும் என்ன நடந்ததுன்னு சொல்றேன்.
1st வருஷம்  அவ்வளவா எதுவும் நடக்கல.போன புதுசு இல்லயா...அதனால ரொம்பவே அடக்கி வாசிச்சோம்.எங்க க்ளாசில படிச்சது 5 நார்த்தீஸ் தான்(வட இந்திய மாணவர்களின் ஷார்ட் ஃபார்ம் :)).அதுங்களுக்குளயே கொண்டாடிக்கிச்சிங்க.நாங்களும் அவ்வளவா கண்டுக்கல.நாங்க வெறும் பாக்க மட்டுந்தான் செஞ்சோம்.ரெண்டாவது வருஷத்துக்கு போவோம்.காலைலல்லாம் ரொம்ப அமைதியா இருந்தது மொத்த காலேஜுமே.என்னட இம்புட்டு சைலெண்டா இருக்கேன்னு நெனச்சிகிட்டே சாயங்காலம் ஹாஸ்டல் போனா ஒரே ரணகளமா இருந்தது.ஒரு சின்ன குறிப்பு:எங்க ஹாஸ்டலை ரெண்டா பிரிச்சி இருப்பாங்க.சீனியர்ஸ் ஹாஸ்டல் அண்ட் ஜீனியர்ஸ் ஹாஸ்டல்.

   ஜூனியர்ஸ் ஹாஸ்டல்ல முதல்,ரெண்டாம் வருஷ மாணவிகள் மட்டும் தான் இருப்போம்.ராகிங் ஒழிக்கரதுக்காக அப்படி ஒரு ஏற்பாடாம்!!!!ஆனா சீனியர்ஸ் ஹாஸ்டல் தாண்டித்தான் போக முடியும்(வச்சாய்ங்கல்ல ஆப்பு).எங்க சீனியர்ஸ் எங்கள பாசம கூப்ட்டு மூஞ்சி ஃபுல்லா கலர் அடிச்சு விட்டாங்க.ஆகா இதான் ஹோலியா...புத்தருக்கு கிடைத்த ஞனோதயம் மாதிரி எங்களுக்கும் கெடச்சிடிச்சி.
இப்போ நாமளும் ஹோலி வெளயாண்டே ஆகணுமே..ஆனா கலர் இல்லயே எங்ககிட்ட..என்ன பண்றது!!!அப்போ கை குடுத்தது உற்ற நண்பன் ப்ரில் இங்க்!!!!எடுத்து தண்ணில கலந்தோம்.நீலம் + கருப்பு..அடி பின்னி பெடல் எடுத்தோம்!!!

மூணாவது நாலவது வருஷமெல்லாம் அட்வான்ஸ்டா ஊருலேர்ந்தே கலர் வாங்கிட்டு வந்துட்டோம்.செம ஆட்டம்.அப்படிடே வாட்டர் கூலரை ஸ்க்ரூ ட்ரைவரை போட்டு ஓப்பன் பண்ணி அதுக்குளேருந்து நேரடியா தண்ணியை எல்லர் மேலயும் கொட்டுவோம்.
அப்போ நல்ல ஆட்டத்த போட்ட பலன் அடுத்த 4 நாள் இருக்கும்
பின்விளைவு 1:
மூஞ்சி கன்னங்கரேல்ன்னு இருந்தது(ஏற்கனவே கொஞ்சம் கலரு கம்மி!!!இதுல இன்னும் கம்மியா).நாங்க அதை எடுக்க என்னனமோ போட்டு பாத்தோம்.
1)விம் பார்
2)சர்ஃப் பவுடர்
3)ரின் பார்
4)மீரா ஷியக்காய்

இவ்வளவு போட்டதுக்கப்பறம் தான் லேசான மாற்றம் தெரிந்தது,
பின்விளைவு 2:
 அதிகபட்ச பாதிப்பு எங்க தலமுடிக்கி தான்.4 பாக்கெட் ஷாம்பூ போட்டத்துக்கப்பறமும்  அசரவே அசராது!!!! இந்த அயர்லாந்து காப்டன் போர்ட்டர்ஃபீல்டு மண்ட இருக்கும் பாருங்க ஒரு பக்கம் மஞ்சளாவும் ஒரு பக்கம் வயலட்டாவும்.அப்படி இருக்கும்.இருந்தாலும் அசராம ஒவ்வொரு வருஷமும் அட்டகாசம் பண்ணுவோம் தான்.
பின்விளைவு 3:
கண்டிப்பா 10-16 பேரு கால்ல ஸ்ப்ரெயினாகி க்ரெப் பாண்டேஜ் போட்டிருப்பாங்க..
அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணை வேற  எதுவுமே கடயாது!!!

ஹ்ம்ம்ம்ம்ம்ம்.அது ஒரு நிலாக்காலம்.ஓக்கே...பதிவின் இறுதிக்கு வந்தாச்சு.
நீங்களும் ஹோலி கொண்டாடுங்க...
HAVE FUN GUYS!!!HAPPY HOLI...

எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகணும்!!!!
யாராவது சொல்லுங்களேன்...இந்த தமிழ் மணம் பட்டயை எப்படி இணைப்பது...அந்த தளத்தில் சொன்ன விதிமுறைப்படி செய்தேன்.ஆனால்
என் கண்ணுக்கு தெரியவே மாட்டேங்குது.
நன்றி.வணக்கஹம்.
என்றும் அன்புடன்,
கிருத்திகா.

15 March, 2011

ஏமாற்றாதே ஏமாறாதே

                                       வணக்கம் நண்பர்களே!!!மிக மிக மிக நீண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு...மீண்டும் வந்துவிட்டேன்.என்னோட ப்ளாக் அட்ரஸ்கூட மறந்து போச்சுங்க..நான் போஸ்ட் எழுதி ஒரு வருஷத்துக்கு மேலயே ஆச்சு...இந்த ஒரு வருஷத்துல எத்தனையோ தடவ போஸ்ட் எழுதணும்னு நெனச்சுருகேன்.அட நெசந்தானுங்கோவ்..நம்ம தலைவர் பட ரிலீசுக்கு கூட ஒரு போஸ்ட் போட முடியாத பாவி ஆகிட்டேன்..சரி...விடுங்க.இப்போ விஷ்யத்த ஆரமிப்போமா.
விஷ்யம் நம்பர் ஒண்ணு--
ஜப்பானுக்கு இன்னும் எத்தன அதிர்ச்சிதான் காத்திருக்கு!!!!
ரொம்ப காலத்துக்கு மின்னாடி அமெரிக்கா போட்ட ஆட்டம் பாம்.
இப்போ ஆண்டவன் போட்டாங்கர பேர்ல சுனாமி + நில நடுக்கம்.போதாக்குறைக்கு அணு உலை வேற வெடிச்சு போச்சாம்.எனக்கு  தசாவதாரம் படம் பாக்கற மாதிரியே ஒரு பீலிங்கி. பாக்கவே ரொம்ப கோரமா இருந்தது அந்த விடியோஸ்.
கடவுளே...எந்த நாட்டுக்கும் இந்த நெலம இனிமே வரக்கூடாது!!!!!
விஷ்யம் நம்பர் ரெண்டு :
ஜப்பான் முழுகுது ஒரு பக்கம்..ஆனாலும் நமக்கு அதெல்லாம் பெருசா தெரியாது.சவுத் ஆப்பிரிகாகிட்ட தோத்துப்போச்சு இந்தியா..அந்த சோகத்துல தான் நாம முழுகி இருக்கோம்.(நான் ரொம்பவே முழுகிட்டேன்)
நான் செம்ம டென்ஷன் ஆகிட்டேன்.நம்ம சச்சு 111(அதுவே ராசி இல்லாத நம்பர்னு யாரும் நெனக்காதீங்க) அடிச்சும் ஜெய்க்கல.என்ன கொடும சார் இது!!!!!
என்னோட ப்ரெண்ட்ஸ் சொல்ராங்க சச்சு சதம் அடிச்சதாலதான் நாம மாச் ஜெய்க்கல...Its unlucky if he gets 100.
ஐயகோ என்ன ஒரு அவமானம் நம்ம தலைவருக்குன்னு களத்துல எறங்கி பின்னி எடுத்துட்டேன் அவங்கள...இருடந்தாலும் மனசு கேக்காம இங்கயும் பொலம்பிட்டேன்.
ஆரம்பத்துல நம்ம டீமுக்கு எல்லாரும் உட்ட பில்டப்ப பாக்கும்போது நெசமாவே ஜெய்ச்சுருவோம் உலககோப்பையன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.
நடுவர் நாட்டாமை வாய்ஸ்:அயர்லாந்துக்கு தான் நியாயமா கப்பு போயி சேரணும்ங்கிரது இந்த நாட்டாமயோட தீர்ப்புலே!!!!!

விஷ்யம் நம்பர் மூணு-- இன்னைக்கு ஒரு பிச்சக்காரனுக்கு 60 ரூபாய் தர்மம் பண்ணினதா நெனைக்க வெச்சுட்டான் இந்த ஏர்டெல்காரன்.நேத்துதான் 202 ரீசார்ஜ் பண்ணினேன்.அது புடிக்கல இந்த கட்டதொறைக்கு.இன்னைக்கு ஒரு போன் வந்துது.எடுத்தா ஏர்டெல் ரெப்ரெசெண்டேடிவ் பேசினான்.
ஏ.ரெ: வணக்கம் மேடம்.உங்க கூட ஒரு 2 நிமிஷம் பேசலாமா..
நான்:யெஸ் பேசலாமே.
ஏ.ரெ: நீங்க ஹலோ ட்யூனா வெச்சுருக்கற பாடலுக்கு  மாசம் 30 ரூபாய் சார்ஜ் பண்றோம்.ஆனா  ஒரு ஸ்பெஷல் ஆபர் ஒண்ணு வந்துருக்கு.அதுல நீங்க 3 மாசத்துக்கு 60 ரூபாய் கட்டினா போதும்.
நான்(மைண்ட் வாய்ஸ்): நாம இதை இந்த மாசம் எடுத்து உட்டுடலாம்னு நெனச்சோமே...இவன் என்ன இப்டி சொல்றான்!!!!60/3=20 ரூவா. இப்போ மாசம் 30 ரூவா கட்டுறோம்.மாசத்துக்கு 10 ரூபாய் மிச்சமா... ஆகா ஆகா..ஓ.கே சொல்லிட வேண்டிதுதான்
ஏ.ரெ:அதுல நீங்க சேர விரும்பரிங்களா..
நான்: கண்டிப்பா சேரலாமே!!!!
ஏ.ரெ:இப்போவே உங்க அக்கவுண்ட்லேந்து 60 ரூபாய எடுத்துடுவோம்.
சம்மதமா?
நான்:ஓக்கேங்க சேத்து விடுங்கங்க
ஏ.ரெ:ஓகேங்க ரொம்ப நன்றி.
--முற்றும்--
இதுல என்னா  அநியாயம் இருக்கு? அதுதானே உங்க கேள்வி!!!
நான் 2 நாள் முன்னாடிதாங்க இந்த மாசத்துகான 30 ருபாய கட்டினேன்.:(:(:(
60+30 -- 90...3 மாசத்துக்கு 90 ரூபாய வாங்கிட்டான் அவன்.
ஆகமொத்தம் அவனுக்கு போய் சேர வேண்டிய காசு போயிடிச்சு.
ஆகவே மக்களே மக்களே மக்களுக்கு மக்களே...தயவு செஞ்சுஇலவசங்களை நம்பி ஏமாறாதீர்கள்..
நான் கருத்து சொல்ற அளவு இந்த உலகம் ஆய்டுச்சா...ச்ச...
பின் குறிப்பூ:
ஆமா அவந்தான் கேட்டான்னா உனக்கு எங்கடீ போச்சு அறிவு...வேணாம்னு சொல்ல வேண்டியதுதானே??இத நீங்க உங்க மனசுல நெனச்சுருப்பீங்க கண்டிப்பா..அதுலயும் ஒரு மேட்டர் இருக்கு.
என் ஹலோ ட்யூன் என்ன தெர்யுமா!!!
கஷ்டபடாமே எதும் கெடிக்காது
கஷ்டபடாமே கெடிக்கர்து என்னிகுமே நெலக்காது.
அதிகமா ஆசேபட்ற ஆம்ப்ளேயும்
அதிகமா கோவப்பட்ற பொம்ப்ளேயும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல!!!!
பை
மிஷ்டர்.ஆறுபடையப்பா..

பதிவின் இறுதிக்கு வந்தாயிற்று.
எழுத எக்கச்சக்க விஷயங்கள்.கொஞ்சங்கொஞ்சமா எழுதுகிறேன்.வாசக மற்றும் வாக்காளப்பெருமக்களே...எப்போதும் போல தங்கள் ஆதரவை எனக்கு தந்தருள்க.
நன்றி.வணக்கஹம்..ஹீ ஹீ
என்றும் அன்புடன்,
கிருத்திகா.