21 August, 2009

Love Aaj Kal

ஒரு நேர்மையான காதல்கதையைப் படமாகப் படைத்தமைக்கு இயக்குனர் இம்தியாஸ் அலிக்கு ராயல் சல்யூட்!

ஜெய்(சைஃப் அலி கான்)யும், மீரா(தீபிகா படுகோனே)வும் லண்டனில் சந்தித்து நண்பர்களாகிறார்கள். Again, நண்பர்கள்தான். வேறு காதலோ - கத்திரிக்காயோ எதுவும் அவர்களுக்கு துளிர்க்கவில்லை. அவ்வப்போது காண்பிக்கும் காட்சிகளின் மூலம் மீராவுக்கு காதல் உணர்வு துளிர்ப்பதைச் சொல்கிறார்கள். ஆனால் ஜெய் ஒரு மாடர்ன் இளைஞனாகத் திரிகிறான். ஆர்க்கியாலஜியில் சாதிக்க இந்தியா புறப்படுகிறாள் மீரா. அவ்வளவு தொலைவிலிருந்தெல்லாம் நாம் நண்பர்களாக இருகக்வோ (Boy Friend -Girl Friend) நம் உறவைத் தொடரவோ முடியாதென முடிவு செய்து BREAKING PARTY கொடுத்துக்கொண்டு பிரிகிறார்கள். இந்த BREAKING PARTY சமபந்தப்ப்ட்ட பேச்சு வரும்போதே தீபிகாவின் முக மாற்றத்தை வைத்து இது காதலா வெறும் நட்புதானா என அவள் குழம்பியிருப்பதை பார்வையாள்ர்களுக்கு உணர்த்துகிறார் இயக்குனர்.

மீரா கிளம்பும்போது வழியனுப்பிவிட்டு அமர்ந்திருக்கும் ஜெய்யிடம் ரிஷி கபூர் தனது காதலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். இங்கே படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. இளமைக் கால ரிஷிகபூராக சைஃப் அலிகானையே காட்டியிருக்கிறார்கள். அவரது காதலியாக வருபவர் அவ்வளவு அழகு.

இங்கே ஜெய்க்கு இன்னொரு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கிறாள். அங்கே மீராவுக்கு விக்ரம் என்றொரு பாய் ஃப்ரெண்ட் கிடைக்கிறான். நடுநடுவே ஜெய்யும், மீராவும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள். மீராவுக்கு அந்த பாய் ஃப்ரெண்டுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முதல் நாளிரவு ஜெய்யிடம் உனக்கேதும் காதல் உணர்வே வரவில்லையா என்பது போல மீரா கேட்க, ஜெய்க்கு கோவம் வருகிறது. ஒன்றுமேயில்லை.. நீ திருமணம் செய்து கொண்டு நன்றாக இரு.. எனக்கப்படியேதும் கவலையில்லை என்கிறான்.

திருமணம் முடிந்து விக்ரமுடன் கட்டிலில் இருக்கும்வேளையில் ஜெய் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றுணர்ந்து மீரா கணவனிடம் சொல்லிக் கொண்டு ஜெய்யைப் பார்க்கப் போகிறாள். பாதி வழியில் ஜெய்க்கு அலைபேச அவனோ தனது கனவு ப்ராஜெக்ட் ஒன்றிற்காக சான்ஃப்ரான்ஸிஸ்கோ கிளம்புவதைத் துள்ளலோடு சொல்ல, அவனுக்கு தன்மீது எந்த வித ஈர்ப்பும்மிலை என்று புரிந்து கொண்ட மீரா திரும்புகிறாள். (எங்கே திரும்பிச் சென்றாள் என்று அப்போது சொல்லாமல் விட்டு - பிறகு சொன்ன இடத்தில் இயக்குனர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்!)

ஜெய்க்கோ, வேலையில் சேர்ந்தபிறகு எல்லாம் ROUTINE ஆன வெறுப்பில் இருக்கும்போது மீரா பற்றிய நினைவு வருகிறது. பிறகு.... என்ன நடந்தது என்பதை திரையில் காண்க!


இயக்குனருக்கு பல இடங்களில் கைதட்டத் தோன்றுகிறது. தற்போதைய காதலையும், ரிஷிகபூரின் இளமைக்காதலையும் மாறி மாறி காண்பிக்கும் யோசனை, BLACK COFFEE-ஐயும் ஒரு கேரக்டராக உலவ விட்டது, ஜெய்யின் கனவு வேலை கிடைத்ததும் அவன் வழக்கமான வேலைச் சூழலில் உற்சாகமிழந்து காணப்படுவதைக் காண்பித்த விதம்... அனைத்தும் சபாஷ்!

வசனங்கள் - அற்புதம்!

உணர்வின்றி அழகுக்காக காதலை ஓகே செய்வதோ, பணத்துக்காக ஓகே செய்வதோ வேண்டாம். உள்ளுக்குள் அந்த ஃபீலிங் இல்லாமல் காதலிக்கவே காதலிக்காதீர்கள் என்று சொன்னமைக்காக இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!

2 comments:

  1. உன் சொந்த விமர்சனமா மாமி???

    ReplyDelete
  2. namaku enth kalathula purinjuruku HIndi
    ellam suttathu than...nadula director touch ah konjama kuduthurukken :)

    ReplyDelete