26 February, 2013

ஆதி பகவன்--எப்படி இருக்கு???


ரொம்ப லேட்டா போடறேன் இருந்தாலும் பரவால்லை!!
படத்தை பத்தி மூணே வார்த்தைல சொல்லிடலாம்!!!
 சண்டை சண்டை சண்டை!!  அவளவுதானா!!!! இல்லை இல்லை!!மேல படிங்க!!

படத்துல  இது நல்லால்ல அது சுமார் அப்டின்னுலாம் சொல்லபோறது இல்லை!!
படத்துல பாராட்டவேண்டியது அப்டின்னா முதல்ல அந்த ஸ்டண்ட் மாஸ்டர் தான்!! கொக்கமக்கா எப்டி எப்டிலாமோ சண்டை காட்சி அமைச்சிருக்காங்க!!!
அடுத்ததா நம்ம செல்லம் :) ஜெயம் ரவியைதான் பாராட்டணும்!! ஆதி ரோல்லயும் சரி பகவான் ரோல்லயும் சரி. சும்மா பின்னி பெடல் எடுத்துருக்கார் மனுஷன்!!
நெக்ஸ்ட் சொல்லணும்னா படத்தோட திரைக்கதை!!! சில இடங்களை கணிக்கும்படியா இருந்தாலும் எனக்கு நல்லா இருந்தமாதிரி தோணிச்சு!!
அப்படி என்னதான்யா கதை???
ஆதிஷண்முகமா தாய்லாந்துல இருக்காரு ஜெயம் ரவி.அவரு அங்க ஒரு டான்!! சீட்டிங்க் , கடத்தல் போன்ற செயல்களில் கிங்!!
பகவான் அப்படிங்கர பேர்ல மும்பைல ரௌடித்தனம் பண்ணிகிட்டு இருக்காரு .நெய்ல்பாலீஷ் , லிஃப்டிக் எல்லாம் போட்டு கலக்குறார்! கொஞ்சம் நீட்டா முடி மட்டும் வெச்சுருக்கலாம்!! அவரை மும்பை போலீஸ் வளச்சுகட்டி தேடுது.
ஆதி ஷண்முகமும் ஆந்திராவுல ஒரு சீட்டிங் பண்ணி அந்த ஏரியா ஹிட்லிஸ்ட்ல வந்துடறார். இந்த சீட்டிக் காட்சிகள் ரொம்ப நல்லா இருக்கும்!!(வேற வழி இல்ல!!!)பகவானுக்கு பதிலா ஆதிஷண்முகம் மும்பை போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டு , ஆந்திரா கேங்க் கிட்டயும் மாட்டிகிட்டு எப்படி சேதாரம் ஆகாம வெளில வராரு? நீது சந்த்ரா பகவானை காப்பாத்த ஆதியை எப்படி மும்பை கூட்டிட்டு வராங்க?? ஐயயோ சஸ்பென்சை(!!!!!) சொல்லிட்டனா!! அதான்யா கதை!!
மத்ததை படத்துல பாருங்கப்பா!!!!!.
யுவனுக்கு என்ன ஆச்சு!!! ஓவர் டைம் வேலை செஞ்ச மாதிரி பாட்டு போட்டு இருக்கார்!!

அவளோதான் மா!!
ஜெயம் ரவி ரசிகைகளே!!!

எஞ்சாய் மா!!!

மீண்டும் சந்திப்போம்

17 March, 2012

மூன்று நிகழ்ச்சிகள்!!!

இந்த வாரத்தில் நடந்த இந்த சம்பவங்களே என்னை இந்த பதிவை எழுத வைத்தன


முதல் நிகழ்ச்சி

இரண்டு வெளினாட்டு சுற்றுலா பயணிகள் கடைத்தெருவில் பராக்கு பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தனர்.
பழவண்டிக்காரிடம் ஒரு சீப்பு வாழைப்பழம் எவ்வளவு என இங்கிலீஷில் கேட்டனர்.அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா??
இதுவா.. இந்த பழமா(ஒரு சீப்பை எடுத்து காட்டினார்)...(5 நொடிகள் கழித்து)
அப்பிடியே பிப்டீ ருபீஸ் !!!!
1 சீப்பு பழம் 50 ரூபாயா!!!

சுற்றுலா வரும் பயணிகளிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளவேண்டும்...அனால் இப்படியா??
அவர் செய்தது சரியா தவறா??

இரண்டாவது நிகழ்ச்சி

இரண்டு ஹிந்திவாலாக்கள் மொபைல் டாப் அப் செய்ய நின்று கொண்டிருந்தனர்.அந்த கடை பெண்மணி பார்க்க கொஞ்சம் பாவமாக இருக்கும் எனக்கு.அதனாலேயே மெனக்கிட்டு என் வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளை விடுத்து பொதுவாக அங்குதான் ரீசார்ஜ் செய்வேன். எனக்கு அவங்களை பாத்த உடனே ஆர்வம்.எப்படி பேச போகிறார் அந்த அம்மா அவர்களிடம் என ஆர்வம் பொத்து கொண்டு வந்தது. அந்த பசங்க : அக்கா டொகொமோ ரீசார்ஜ்
அந்த அக்கா : இல்ல இல்ல
அந்த பசங்க : ?????
அந்த அக்கா : நோ நோ

அவர்கள் போன பிறகு அந்த அக்கா என்னிடம் போன வாரம் வந்து இதுங்க 30 ரூபாய்க்கி ரீசார்ஜ் பண்ணிட்டு பணமே குடுக்கல.எவ்வளோ நேரம் நின்னு சண்ட போடுதுங்களே ஒழிஞ்சி கடசீ வரைக்கும் ஒத்துக்கவே இல்ல!!! இந்த வாரமும் என்னால சண்ட போட முடியாதுடா சாமி!!!

இதில் அந்த ஹிந்திகாரங்க பண்ணினதை எதில சேக்கரது???


மூன்றாவது நிகழ்ச்சி :

இது என் சொந்த அனுபவம்.பார்த்தது கேட்டது அல்ல.

வங்கியில் பணிபுரிவதால் பல தரப்பட்ட மக்களையும் தினமும் சந்திக்க நேரிடும்.
மதியம் 1.30 மணி போல ஒரு ஆள் பணம் கட்ட வந்தார்.வந்தவர் என்னிடம் சலானை கொடுத்து விட்டு தன் கையில் இருந்த போனை வைத்து பேச ஆரமித்து விட்டார்.அந்த பணத்தை எண்ணி அவருடய வேலைய முடித்து கொடுக்கும் வரை போனை வைக்கவே இல்லை!!!
இந்த டயலாக்கை எப்படி நீங்க படிக்கணும்னா அந்த ஆள் பேசுவதை பொன்னம்பலம் போல அல்லது ஏதாவது வில்லன் கொடூரமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசுவது போல நினைச்சுக்கோங்க!!!!நான் எப்பவும் போல calm and composed(அதாவது சாத்வீகமுங்க)
நான்: பணம் கட்டும்போது போன் பேசக்கூடாதுங்க
அவர் : நான் யாருன்னு தெரிஞ்சிகிட்டு அப்பறம் பேசுங்க.தினதந்தி ரிப்போர்டர் நானு
நான் :எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ் தான்.பேசகூடாதுன்னா கூடாதுதாங்க
அவர்: அர்ஜெண்டுன்னா பேசதான் செய்வென் அத சொல்ல நீங்க யாரு
நான்:இங்க பேசர்தால என் கவனம் சிதறும்.பணத்தை தப்பா எண்ணிட்ட நாந்தாங்க பொறுப்பு
அவர் : உங்க கவனம் சிதறினா நானா பொறுப்பு!!!!

இதற்கு பிறகு அவரோடு வாதம் செய்ய விரும்பாததால நான் பேசவில்லை.அவர் ஏக வசனம் பேசிவிட்டு சென்றுவிட்டார்

அவர் கிட்ட நான் கேக்க நினத்த கொஷ்ட்டின்!!!
ரிப்போர்டர்னா என்ன கொம்பா!!!
மக்கள் மனதில் உள்ள எண்ணமெல்லாம்..என்னது  பாங்கா... அதுல இருக்கறவங்கல்லாம் வேலையே செய்யமாட்டாங்க!!! என்ற நினைப்புதான்!!! அதனால் எவ்வளவுதான் வேலை செஞ்சாலும் இந்த எண்ணம் போகறதே இல்லை!!!.
மக்களே மக்களே...எல்லாரும் அப்படி கிடையாது!!!!
பாங்கில இருக்கறவங்களும் மனுஷங்கதான்!! புரிஞ்சிகுங்க!!!


இதில் யார் செய்தது தவறு!!

சரி ரொம்ப சொரிஞ்சிட்டேனா!!!!
டாடா
மீண்டும் சந்திப்போம்
கிருத்திகா

04 September, 2011

எனக்கு பிடித்த பாடல்கள்

ஹலோ மக்களே!!!
ரொம்ப நாளா எழுதவே வரதில்ல!!! இன்னைக்காவது ஒரு போஸ்ட் போட்டுரனும்னு முடிவோட வந்துருக்கேன்!!!  எனக்கு பிடித்த பாடல்கள் பத்தி நான் ஆயிரம் பதிவு போடலாம்!! முடிவே அடையாத டாபிக் இது!!! அப்பபோ நியாபகம் வர வர எழுதறேன்!!! பாடகர்/பாடகி ஒருத்தரை எடுத்துகிட்டு அவங்களோட சூப்பர்/ எனக்கு பிடிச்ச பாட்டுகளை பத்தி சொல்லலாம்னு முடிவெடுத்துருக்கேன்!!!

அதுக்கு முன்னாடி சில பதிவர்கள் செய்யர ஆக்ஷன்ஸ் பத்தி சொல்லணும்!! ஆகா ஹன்சிகா,அனுஷ்க்கா இவங்களை வெச்சு எப்டி எப்டிலாம் காமெடி பண்றாங்க!!!! மை டியர் பெண் பதிவர்களே!!! நாமளும் இப்படி ஒரு காமெடி தலவலிய செய்தா எப்டி இருக்கும்!! உதாரணத்துக்கு ஜெயம் ரவியின் ஸ்மார்ட்னெஸ் , சிம்புவின் சார்ம்(கஷ்ட காலம்), ஷாஹித் கபூரின்  க்யூட்னெஸ் இப்டி எதுனா எழுதலாமா!!!(ஏற்கனவே முடியல...இதுல இந்த கண்றாவி வேறயா!!!)

ஒகே ஒகே!!!( படம் பேரு இல்லைங்க...நெஜமாலுமே ok) அடுத்த விஷயத்துக்கு ஜம்ப் பண்ணலாம்!!!

நான் பாட்ட பத்தி எழுதறேன்!!! பாடினவங்கள ஈசியா கண்டு பிடிசுடலாம்!!! அதனால அவங்களை பத்தி கடசியா!!

1) ஒரு தெய்வம் தந்த பூவே பத்தி சொல்லவே வேணாம்!!! அந்த ஹம்மிங்குக்காகவே அதை எத்தன தடவ வேணாலும் கேக்கலாம்!!!!

2) நான் சீனியில் செய்த கடல்!!!!! அப்டின்னு ஆரமிச்சாலே சும்ம சர சரன்னு எகிறும் பல்ஸ்!!

3)வெயில் படத்துல காதல் நெருப்பின் நடனம் பாட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்!!!

4) விசில் படத்துல கிறுக்கா கிறுக்கான்னு ஒரு பாட்டு...செம்ம பீட் சாங்க் அது!!!

5)உயிரே உன்னை உன்னை எந்தன்!!!!! இது ஒரு புது டைமென்ஷன் சாங்க்!!!

அவங்க பாடினதிலயே மாஸ்டர் பீஸ் இதெல்லாம்!!!
நம்ம தலைவருக்கும் இவங்களுக்கும் செம ராசி!! இவங்க பாடின பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட்!!

எ.டு
1)சஹானா சாரல் தூவுதோ!!!
2)கிலிமஞ்சாரோ !!!

அப்பறம் ஹாரிஸ்ஜி மியூசிக்லயும் இவங்க ஜொலிப்பாங்க!!

எ.டு
வாராயோ வாராயோ - ஆதவன்

இன்னும் நெறய இருக்கு!!! சட்டுனு நியாபகம் வந்தததை ரெகார்ட் பண்ணிட்டேன்!!!

போனஸ் ஃபொடோ!!

சூப்பரா!!!!

மீண்டும் சந்திப்போம்!!!
டாடா

20 June, 2011

wwe-capital Punishment!!!!!!

இது ரெஸ்ட்லிங்க் பத்தின பதிவு பிடிக்காதவங்க அப்படியே ஓடிப்போயிடுங்கோ!!!!!!!


WWEல ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு பெரிய ஸ்டார் ஈவெண்ட் போட்டுடுவாங்காங்கரது தெரிஞ்ச விஷயமே!!!!
காபிடல் பனிஷ்மெண்ட் அப்படின்னு ஒரு எவெண்ட் தானிந்த மாசத்தின் எவெண்ட்!!!!
அதுல மாட்ச் ரிசல்ட்ஸ் லீக் ஆகிடுச்சு!!! இந்த வாரம் சண்டே தான் இதனுடய டெலெகாஸ்ட்!!!எனக்கு தெரிஞ்ச முடிவுகளை பத்தி நான் சொல்ல போறேன்!!!!
மாட்ச் 1:
C.M.PUNK VS REY MYSTERIO
இது ஒரு ராங்க்-2 கேம் தான்!!! 2 பேருமே நல்லா விளயாடக்கூடியவங்க.நான் எதிர்பாத்ததுக்கு மாறாக C.M.PUNK ஜெய்ச்சுட்டான்!!!

மாட்ச் 2:
ALBERTO DEL RIO VS BIG SHOW
இது ஒரு ராங்க்-3 கேம். பிக் ஷோ நல்ல மாடு கணக்கா இருந்தாலும் சின்ன பயமாதிரி தான்!!! அடி தாங்க மாட்டான்!!! அதனால நேத்து வந்த டெல் ரியோ(இவன் கடைஞ்செடுத்த கேணை!!!) கிட்ட தோத்து போயிட்டார்!!!!

மாட்ச் 3:
WADE BARRET VS EZEKIERL JACKSON
இதுக்கெல்லாம் ராங்க் கடயாது!! ஏப்ப சோப்ப மாட்ச்!!!! எசிகிஎல் ஜாக்சன் ஜெய்ச்சுட்டான்!!!! எதிர்பாத்ததுதான்!!!!

மாட்ச் 4:
KOFI KINGSTON VS DOLPH ZIGGLER
இந்த எச்சூஸ் மீன்னு ஒரு லேடி வருமே தெரியுமா!!!! அதாங்க நம்ம விக்கீ கரீரோ!!!மோஸ்ட் ஹேட்டட் வுமன் அதுதான்!!!! அதோட சேஷ்டைஎல்லாம் ரொம்ப கப்பித்தனமா இருக்கும்!!!! அந்த லேடி கூட திரியரவந்தான் இந்த டால்ப் ஜிக்லர்...காசுக்காக சேர்ந்த கூட்டம்!!!! அந்த சகுனி எச்சூஸ் மீ டால்பை ஜெய்க்க வெச்சுடிச்சி..என்னிக்கிதான் ரெண்டும் ப்ரேக் அப் சொல்ல போகுதுங்கன்னு ஆவலா பாத்துகிட்டு இருக்கேன்!!!

மாட்ச் 4:
RANDY ORTON VS CHRISTIAN
ரொம்ப எதிர்பார்க்கப்பட்ட மாட்ச்களில் இது ஒன்று!!!!! ராண்டி ஓர்டன் ஊதி தள்ளிட்டான் க்ரிஸ்டியன!!! இந்த க்ரிஸ்டியனுக்கு வாயி இருக்கர அளவு திறமை பத்தாது!!!!
மாட்ச் 5:
JOHN CENA VS R-TRUTH
எச்சூஸ் மீக்கு கொஞ்சமும் சளச்சவன் இல்ல இந்த ட்ரூத்!!!!முதல்ல வெத்து பீசா இருந்துச்சு!!!இப்போ டெர்ரர் ஆகரேன் பேர்வழின்னு காமெடி பீசா ஆகிடுச்சு!!!!
ஜான் சீனா வடிவேலு மாதிரி!!!! அடி தாங்கறதுல சொன்னேங்க!!!! பயபுள்ள எவ்வளோ அடிச்சாலும் தாங்குவான்...

தி சாம்ப் இஸ் ஹீயர்!!!!!சொல்லவே வேணாம் யார் ஜெயிச்சாங்கன்னு!!!!
மாட்ச் 6:
ALECS RILEY VS MIZ

இந்த அலெக்ஸ் ரைலீ மிஸ் சோட முன்னாள் அல்லக்கை!!! அவனை அநியாயத்துக்கு சிக்கிட்டான் அடிமைங்கற ரேஞ்சுக்கு வெரட்டுனான் இந்த  மிஸ் கபோதி!!!!! அந்த அலெக்ஸ்க்கு வீரம் வந்து பிச்சு பேத்து எடுக்க ஆரமிச்சுட்டான் இந்த மிஸ் ச!!!!
நான் வேண்டுன மாதிரி அலெக்ஸ் ரைலீ ஜெய்ச்சுட்டான்!!!


அவ்வளோதான் முடிஞ்சு போச்சு!!!!
இந்த சண்டே மிஸ் பண்ணாம பாருங்க!!!

நன்றி நன்றி!!